உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் நல்லூர் கந்தனின் திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் பயணத்துக்கு விசேட சலுகை

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:

தற்போது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான கட்டணங்கள் பின்வருமாறு உள்ளன:

இருவழி கட்டணம் – ரூ. 28,300

ஒருவழி (காங்கேசன்துறை முதல் நாகபட்டினம்) – ரூ. 12,100

ஒருவழி (நாகபட்டினம் முதல் காங்கேசன்துறை) – ரூ. 16,000

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பெறக்கூடிய விசேட சலுகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கப்பல் சேவை, செவ்வாய்கிழமை தவிர்ந்த பிற ஆறு நாட்களிலும் வழமைபோல் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. சேவையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை தொடர்பான தகவல்கள் முற்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் பணிப்பாளர் ஜெயசீலன் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp