கடந்த வாரமாக நிலையாக இருந்த தங்க விலை, இன்றோடு மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்று (19) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 42,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.
