உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது:

‘உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளன.

நடைபெற இருக்கும் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான சகவ பூர்வாங்கப் பணிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சுமார் 6000 அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகஸ்தர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தெளிவூட்டல்கள் மற்றும் வழிகாட்டல் வகுப்புகள் அனைத்தும் முடிவுற்றுள்ளன. திங்கட்கிழமை, வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பெட்டிகள் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.’

இம்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி மற்றும் நகர சபை, மேலும் ஒன்பது பிரதேச சபைகள் அடங்கிய 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்காக, 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

எனவே, நாளை நடைபெறும் வாக்களிப்புக்காக, காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும்.

வாக்கெண்மையிலிருந்து பணிகளுக்காக 144 நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை.

தேர்தல் விதிமுறை சம்பவங்களாக மட்டும் 353 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, என அவர் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp