உள்ளூர் செய்திகள்

புதிய அரசு இதுவரை முன்னெடுத்த முன்னேற்றங்களை மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் விஜித ஹேரத்

பொறுப்புகூறும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கை அரசாங்கம், உள்நாட்டுப் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு தலையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பொறுப்புகூறல் செயல்முறைகள் முழுமையாக உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60ஆவது அமர்வில் (சுவிட்சர்லாந்து ஜெனீவாவில்) மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார்.

அவர், புதிய அரசு இதுவரை முன்னெடுத்த முன்னேற்றங்களை பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்றும், பொறுப்புகூறும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

டர்க் சமர்ப்பித்த அறிக்கையில், நீதியை நிலைநிறுத்தல், சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது, பாகுபாடு மற்றும் பிரிவினைவாத அரசியலை நீக்குவது குறித்த இலங்கை அரசின் வாக்குறுதிகள் இனி கணிசமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், உள்நாட்டுப் போர் காலம் உட்பட நிகழ்ந்ததாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பில் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதக் குழுக்களின் பொறுப்பைத் தெளிவாக ஏற்க வேண்டும் எனவும் அறிக்கை குறிப்பிட்டது.

மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரிக்க சுயாதீன சிறப்பு வழக்கறிஞரை உள்ளடக்கிய தனித்துவமான நீதித்துறை அமைப்பை நிறுவ வேண்டும் என டர்க் பரிந்துரைத்தார்.

இத்துடன், பொறுப்புத்தன்மை மற்றும் நீண்டகால நல்லிணக்கம், நிலையான அமைதிக்காக சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை (PTA) ரத்து செய்தல், அதன்படி நீண்டகாலமாக கைதிலிருப்பவர்களை விடுதலை செய்தல், பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள், விரிவான அரசியல், சட்ட மற்றும் நிறுவல் மாற்றங்கள் என பல பரிந்துரைகளும் அறிக்கையில் இடம்பெற்றன.

இதற்கிடையில், இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை அமைச்சர் ஹேரத் விளக்கினார்:

PTA நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கலந்துரையாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன.

செம்மணி மனித புதைகுழி கல்லறை அகழ்வுப்; பரிசோதனைகளுக்கான தேவையான வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் நிறுவப்படுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வு தொடர்பான தேசியக் கொள்கை மற்றும் செயல் திட்டம் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குடிமக்களுக்கான உரிமைச் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தங்கள் அன்பு கொண்டவர்களை நினைவுகூரத் தடையின்றி செயற்படுகின்றனர்.

டிசம்பர் முதல் வாரத்தில் ‘இலங்கை நாள்’ கொண்டாடப்படும்.

சுயாதீன பொது வழக்குரைஞர் அலுவலகம் ஒன்றை அமைக்க பொதுமக்களிடமிருந்து மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், வழக்கு தொடர்வதில் சட்டப்பூர்வ ஆதாரம் இருந்தாலே சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார் என்றும், அவரது அதிகாரம் நீதித்துறை பரிசீலனையிலிருந்து விடுபடாதது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் பேரவையின்; 60ஆவது அமர்வு செப்டம்பர் 8 அன்று தொடங்கி, அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp