உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மாற்றுச் சட்டமான பீடிஏ. சட்டமானது இனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மாற்றுச் சட்டமானான சட்டமான PTA சட்டம் எந்தவொரு இனத்தையும், சமூகம் அல்லது மதத்தை எதிர்த்து பயன்படுத்தப்படுத்தப்பட மாட்டாதென என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (15-07) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.

முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மீது இச்சட்டம் இலக்கு வைத்து பயன்படுத்தப்படுடுமென செய்யப்படும் பரப்புரை தவறானது எனவும், கைது நடவடிக்கைகள் சம்பவத்தின் தனிச்சூழ்நிலை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிக்கோவையின் அடிப்படையில், எந்த ஒரு இன, மத, சமூக அடையாளத்தையும் இலக்கு வைக்க முடியாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் மாற்றுச் சட்டம் இல்லாத நிலையில் PTA சட்டத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, ஜனாதிபதி சட்டத்தரணி ரெயன்சி ஆர்ஸிகுலரத்ன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், மே பொதுமக்களின் ஆலோசனைகளை திரட்டும் பணிகளை தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஊடாக, புதிய சட்டமொழிவை உருவாக்கும் வரை தற்போதைய PTA சட்டம் இடைப்பட்ட சட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதைப் போன்று, இலங்கையிலும் இச்சட்டம் அவசியமானது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp