நடப்பில் உள்ள நீண்டகால நிலக்கரி தரக் குறைபாடுகள் காரணமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்க 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அவசர கொள்முதல் முறையில் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அவசியம் ஏற்பட்டாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடையே மட்டுமே டெண்டர் அழைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இந்த வாரமே நடைமுறை தொடங்கும் என்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தரம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், இலங்கை நிலக்கரி நிறுவனம் அல்லது அமைச்சகம் இதுவரை நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை.
ட்ரைடெண்ட் கெம்ப்ஃபார் லிமிடெட் நிறுவனத்திற்கு 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை 1.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
