உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது நிகழ்ந்தது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்,
மீதமுள்ள நான்கு பேர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆரம்பக் கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பிறகு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வளத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp