விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் துடுப்பெடுத்தாடியது
மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
தொடர்ச்சியாக ஓட்டங்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இறுதியில் லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 210 ஓட்டங்கள் ; வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் அக்சர் படேல் 22 ஓட்டங்களும், டு பிளெசிஸ் 29 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ஓட்டங்களில் வெறியேறினார்.
அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ஓட்டங்களும், சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இறுதியில் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ஓட்டங்களும், அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

