உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்று மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வாய்வில், இன்றைய தினம் (ஓகஸ்ட் 4) புதிதாக 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக கடந்த 15 நாட்களாக இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக நடைபெறும் அகழ்வில், இன்றைய தினம் வரையிலான கணக்கில் 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீதிமன்றம் வழங்கிய 45 நாட்கள் அனுமதியின் கீழ், இன்றைய தினம் 30 ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மொத்தமாக, செம்மணி பகுதியில் இதுவரை 39 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ந்துள்ளன.

இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கி, இதுவரை 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மொத்த அடையாளக்காணப்பட்ட தொகை 135 ஆக உயர்ந்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp