மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
மாவட்டத்திற்குள்ளேயே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தொடரூந்து சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.
அத்துடன் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்
வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுவருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தினால் இன்னும் பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் தொடர்ந்து மழைபெய்துவருவதால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
