நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ப்ராவின் வருகை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
பிஜிடி தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 3-1 என இந்திய அணி ஆஸியிடம் வீழ்ந்தது.
பின்னர்இ பும்ரா இல்லமலேயே சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.
ஏப்ரல் முதல் வாரத்தில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பும்ராவும் வந்துவிட்டார்.
‘சிங்கம் தனது காட்டுக்குள் வந்துவிட்டது’ என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
𝑹𝑬𝑨𝑫𝒀 𝑻𝑶 𝑹𝑶𝑨𝑹
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/oXSPWg8MVa
இதையும் படியுங்கள்>இலங்கைக்கு GSP + இல்லாமல் போகுமா?