வடமராட்சிப் பகுதியில் மேற்படி இன்சுரன்ஸ் நிறுவனத்தின் மோசடியில் சிக்கி பல இலட்சம் ரூபாய்களை இழந்த இளைஞன் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க பணித்திருப்பதுடன்-பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு கடிதப் பிரதியும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காப்புறுதி நிறுவனம் தாம் அரசுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் என பொய் வாரத்தை கூறி மேற்படி இளைஞனை ஏமாற்றி இருப்பதாக முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
