கணக்காய்வாளர் நாயகம் பதவி நிலையானது நீண்டகாலமாக ; நியமிக்கப்படாமை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்
இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து;ளார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலையில் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கைக்கு நிதி அனுப்பும் முன் நிதி வழங்குவதை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் பொதுப் பணிகள் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திலேயே உள்ளது; ஆனாலும், கணக்காய்வாளர் நாயகம் இல்லாமல் பாராளுமன்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு தனிப்பட்ட நபரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க திட்டமிட்டுள்ளதன் காரணமாக இந்நியமனம் தாமதமாகியுள்ளது என தயாசிரி ஜயசேகரா மேலும் தெரிவித்துள்ளாhர்
