இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் தற்போது எந்தத் திட்டமோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லை என நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒரே பாலின சம்மத உறவுகளை குற்றமாக்கும் குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகளை நீக்குமாறு கடந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சகத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இப்பிரிவுகள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் அதிகாரமளிப்பு சட்டம் பாலினம் மற்றும் பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு செய்யப்படக் கூடாது என்பதை சட்டரீதியாக அங்கீகரிப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி அரிதா விக்ரமசிங்க, திருமணம் என்பது சட்ட ஒப்பந்தம் என்றும், ஒரே பாலின உறவுகளை குற்றமாக்கும் நடைமுறையை நீக்குவதே உடனடி சட்டத் தேவையெனவும் கூறினார்.
குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகள் காலனித்துவ காலச் சட்டங்களாக இருந்து, தனிநபர்களின் தனிச்சுதந்திரத்தில் தலையீடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
