செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் – அமைச்சரவை பேச்சாளர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறான போர் சூழல் ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பது வழமையானதாகும்.
எனவே உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தால், அது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் தற்போது அவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் தான் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றை உபயோகிக்க முடியும்.

அவற்றின் சராரியான விலைகளே தற்போது நடைமுறையிலுள்ளன. போர் சூழல் உக்கிரமடைந்து விலைகள் அதிகரித்தால், அவற்றுக்கேற்ப இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும். தற்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளாhர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp