உள்ளூர் செய்திகள்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவதுடன் படகுகளும் பறிமுதல் செய்யப்படும் – கடற்றொழில் அமைச்சர்

இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று முதலாம் திகதி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறலானது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை.

தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர் என கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் அவ்வாறு அத்துமீறிய இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்து;ளளாhர்

🛑 வேலைவாய்ப்பு 🛑

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp