உள்ளூர் செய்திகள்

இணையதளங்கள் ஊடாக கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இணையவழி தளங்கள் வழியாக வழங்கப்படும் பாலியல் தொல்லைகள்; தொடர்பாக எழுந்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளரும் ; உதவி பொலிஸ் அத்தியட்சகருமான வழக்கறிஞர் எப்.யு. வூட்லர், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இந்த விவகாரம் தொடர்பாக சில முறைப்பாடுகள்; கிடைத்துள்ளன. அவற்றை சைபர் குற்றப் பிரிவு கவனத்தில் கொண்டு விசாரணை செய்து வருகிறது.
ஒன்லைன் வழியாக நடைபெறும் பாலியல் தொல்லைகள், மனிதர் கடத்தல் அல்லது சட்டவிரோத பாலியல் சேவைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை சட்டத்திற்கிணங்க இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வயதினை எட்டியவர்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாகாது. ஆனால் இத்தகைய சேவைகள் குற்றமாகக் கருதப்படக்கூடிய விதத்தில் இடம்பெற்றால், குற்றச் சட்டம் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp