உள்ளூர்

அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.

அம்பாறையில் தமிழ் தேசிய கட்சிகள் உட்பட பல சுயேட்சைக் குழுக்கள் இன்று வேட்புமனுக்களை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தமிழரசுக்கட்சியினரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை நேற்று (10) அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர்களான தவராசா கலையரன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான தமிழரசுக கட்சியினர் வியாழக்கிழமை (10) அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அத்துடன் தமிழரசுக கட்சி அணி வீடு சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp