செய்திகள்

பொதுதேர்தல் நடைபெறும் திகதி சட்டவிரோதமானது? திகதிமாற்றம் சாத்தியமா?


பொதுதேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தல் நடத்தப்பட நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 5 கிழமைக்கு குறையாமலும் ஏழு கிழமைக்கு மேற்படாமலும் தேர்தல் தினம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளதாக சட்ட நிபுணர்கள் சுட்டிக்க்காட்டியுள்ளனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி தொடக்கம் 5 கிழமை கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும் 7 கிழமை கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பொது தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாத காரணத்தால் அன்றைய தினம் பொது தேர்தலை நடத்துவது சட்ட விரோதமானது என சட்டநிபுணர்கள் ; சுட்டிக்காட்டியுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்