செய்திகள்

அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம்

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை செல்லாததாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

குறித்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா, மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனு மீதான பரிசீலனையை ஜனவரி 15 ஆம் திகதி மேற்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp