உள்ளூர்

தமிழ் மக்கள் மீது சவாரி விடுகின்றார்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்- எமில்காந்தன்.

தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்
வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 15வருட அரசியலில் முஸ்லீம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்றார்கள் என சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம்கள் தமது அரசியல் தேவையை தமிழ்மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக்கொள்கின்றனர்.
வன்னியில் அனைத்து துறைகளிலும் தமிழ்மக்கள் பலங்குன்றியே உள்ளனர்.

வவுனியா நகரத்தின் பொருளாதாரகட்டமைப்பும் ஆதிக்கமும் முஸ்லீம்களின் கைகளில் உள்ளதாக எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்

இம்முறையும் முஸ்லீம் அரசியல்வாதிகள் இரண்டிற்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நுட்பமான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக எமில்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp